உள்ளம் உருகுதையா!
உள்ளம் உருகுதையா முருகா!
உன்னடி காண்கையிலே
உள்ளம் உருகுதையா முருகா!
ஆசை பெருகுதப்பா முருகா!
உள்ளம் உருகுதையா முருகா!
உன்னடி காண்கையிலே
உள்ளம் உருகுதையா முருகா!
ஆசை பெருகுதப்பா முருகா!
பாடிப் பரவசமாய் உன்னையே
பார்த்திடத் தோணுதையா!
ஆடும் மயிலேறி முருகா!
ஓடி வருவாயப்பா!
பார்த்திடத் தோணுதையா!
ஆடும் மயிலேறி முருகா!
ஓடி வருவாயப்பா!
பாசம் அகன்றதையா! பந்த
பாசம் அகன்றதையா! உன்தன் மேல்
நேசம் வளர்ந்ததையா!
ஈசன் திருமகனே! என்றன்
ஈனம் மறைந்ததப்பா!
பாசம் அகன்றதையா! உன்தன் மேல்
நேசம் வளர்ந்ததையா!
ஈசன் திருமகனே! என்றன்
ஈனம் மறைந்ததப்பா!
ஆறு திருமுகமும் உன் அருளை
வாரி வழங்குதையா!
வீரமிகும் தோளும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா!
வாரி வழங்குதையா!
வீரமிகும் தோளும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா!
கண்கண்ட தெய்வம் ஐயா!
கண்கண்ட தெய்வமையா! நீயிந்தக்
கலியுக வரதனையா!
பாவியென்றிகழாமல் எனக்குன்
பதமலர் தருவாயப்பா!
கண்கண்ட தெய்வமையா! நீயிந்தக்
கலியுக வரதனையா!
பாவியென்றிகழாமல் எனக்குன்
பதமலர் தருவாயப்பா!
/ஆண்டவன் பிச்சி (மரகதவல்லி)
நான் இரசிக்கும் பாடல்களில் ஒன்று.
ReplyDelete