Friday, October 7, 2016

மலர்ந்தும் மலராத பாதி மலர்

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த 
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
/கவிஞர் கண்ணதாசன்

5 comments:

  1. கண்ணதாசன் வரிகளில் எனக்கு என் உள்ளத்திற்கு மிகவும் பிடித்த வரிகள் மிக அழகு மிக அழகு

    ReplyDelete
    Replies
    1. கவியரசர்க்கு என்றென்றும் நான் அடிமை!! வைர வரிகள்!!.

      Delete
    2. கண்ணதாசன் ஒரு சகாப்தம்

      Delete
  2. மிகவும் அருமை.

    ReplyDelete
  3. என் மனம் கவர்ந்த வரிகள்

    ReplyDelete