Friday, October 7, 2016

மலர்ந்தும் மலராத பாதி மலர்

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த 
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
/கவிஞர் கண்ணதாசன்

உள்ளம் உருகுதையா!

உள்ளம் உருகுதையா!
உள்ளம் உருகுதையா முருகா!
உன்னடி காண்கையிலே
உள்ளம் உருகுதையா முருகா!
ஆசை பெருகுதப்பா முருகா!
பாடிப் பரவசமாய் உன்னையே
பார்த்திடத் தோணுதையா!
ஆடும் மயிலேறி முருகா!
ஓடி வருவாயப்பா!
பாசம் அகன்றதையா! பந்த
பாசம் அகன்றதையா! உன்தன் மேல்
நேசம் வளர்ந்ததையா!
ஈசன் திருமகனே! என்றன்
ஈனம் மறைந்ததப்பா!
ஆறு திருமுகமும் உன் அருளை
வாரி வழங்குதையா!
வீரமிகும் தோளும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா!
கண்கண்ட தெய்வம் ஐயா!
கண்கண்ட தெய்வமையா! நீயிந்தக்
கலியுக வரதனையா!
பாவியென்றிகழாமல் எனக்குன்
பதமலர் தருவாயப்பா!
/ஆண்டவன் பிச்சி (மரகதவல்லி)

உளுந்து வெதக்கையிலே

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் ஒத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே..

ஒருதடவை இழுத்து அனைச்சபடி
உயிர்மூச்ச நிறுத்து கண்மணியே......

உன் முதுக தொலைச்சு வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே.....
மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒருபார்வை
உடம்பு மண்ண புதையுற வரையில் உடன் வரக்கூடுமோ......
உசுர் என்னோட இருக்கையில
நீ மண்ணோடு போவதெங்கே......
அட உன் சேவையில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே
கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழி சிரிச்சு பேசறியே
வாயி மேல வாய வெச்சு வார்த்தைகள உறிஞ்சிபுட்ட
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல
அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல
நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே

/வைரமுத்து