Sunday, November 28, 2021

சன கண மன

 சன கண மன அதிநாயக செய கே

பாரத பாக்கிய விதாதா.

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா

திராவிட உத்கல வங்கா.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்

மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.

வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

விந்திய இமாச்சல யமுனா கங்கா

உச்சல சலதி தரங்கா.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்

எதிரொலிக்கிறது;

யமுனை, கங்கை ஆறுகளின்

இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்

வணங்கப்படுகிறது.

தவ சுப நாமே சாகே,

தவ சுப ஆசிச மாகே,

காகே தவ செய காதா.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.

சன கண மங்கள தாயக செயகே

பாரத பாக்கிய விதாதா.

செய கே, செய கே, செய கே,

செய செய செய, செய கே.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!

No comments:

Post a Comment