Saturday, April 9, 2022

கொடியிலே மல்லிகைப்பூ

 கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்


மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால


பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது

உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது

பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு

அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே


No comments:

Post a Comment