Sunday, November 28, 2021

கண்ணன் வருகின்ற நேரம்

 கண்ணன் வருகின்ற நேரம்

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்

தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்

கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென

தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம்

கூட மீளும்!

(கண்ணன்)

சல்ல சலனமிட்டு ஓடும்,

நதி பாடும் - தென்றல்

தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல

துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென

துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்

சொல்லிச் சொல்லி இசைபாடும்!

(கண்ணன்)

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று

கண்டதும் வண்டொன்றும் வர்லை

இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு

காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்

கண்ணன் அன்றி வேறு இல்லேன்!

(கண்ணன்)

தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன

செளக்கியமோ என்று கேட்கும் - அட

மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்

முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே

மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!

(கண்ணன்)

No comments:

Post a Comment