Sunday, November 28, 2021

மலர்ந்து மலராத

 மலர்ந்து மலராத பாதி மலர்

போல வளரும் விழி வண்ணமே


வந்து விடிந்தும்

விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே


நதியில் விளையாடி

கொடியில் தலை சீவி நடந்த

இளம் தென்றலே


வளர் பொதிகை

மலை தோன்றி மதுரை

நகர் கண்டு பொலிந்த

தமிழ் மன்றமே


யானை படை

கொண்டு சேனை பல

வென்று ஆளப் பிறந்தாயடா

புவி ஆளப் பிறந்தாயடா


அத்தை மகளை

மணம் கொண்டு இளமை

வழி கண்டு வாழப் பிறந்தாயடா

வாழப் பிறந்தாயடா


தங்கக் கடியாரம்

வைர மணியாரம் தந்து

மணம் பேசுவார் பொருள்

தந்து மணம் பேசுவார்

மாமன் தங்கை

மகளான மங்கை உனக்காக

உலகை விலை பேசுவார்


சிறகில் எனை மூடி அருமை மகள்

போல வளர்த்த கதை சொல்லவா


கனவில் நினையாத காலம் இடை வந்து கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா


இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா


அன்பே ஆரிராராரோ

ஆரிராராரோ ஆரிராராரிரோ

அன்பே ஆரிராராரிரோ

அன்பே ஆரிராராரிரோ

வந்தேமாதரம் வந்தே மாதரம்

வந்தேமாதரம் வந்தே மாதரம்

அங்கும் இங்கும்

சுற்றி சுற்றி திரிந்தேன்

சின்ன சின்ன பறவைப்போல்

திசை எங்கும் பறந்தேன்

வெயிலிலும் மழையிலும்

விட்டு விட்டு அலைந்தேன்

முகவரி எதுவென்று

முகம் தொலைத்தேன்

மனம் பித்தாய் போனதே

உன்னை கண்கள் தேடுதே

தொட கைகள் நீளுதே

இதயம் இதயம் துடிக்கின்றதே

எங்கும் உன்போல் பாசம் இல்லை

ஆதலால் உன் மடி தேடினேன்

தாய் மண்ணே வணக்கம்

வந்தே மாதரம்

வண்ண வண்ண கனவுகள்

கருவுக்குள் வளர்த்தாய்

வந்து மண்ணில் பிறந்ததும்

மலர்களை கொடுத்தாய்

அந்த பக்கம் இந்த பக்கம்

கடல்களை கொடுத்தாய்

நந்தவனம் நட்டுவைக்க

நதி கொடுத்தாய்

உந்தன் மார்போடு அணைத்தாய்

என்னை ஆளாக்கி வளர்த்தாய்

சுக வாழ்வொன்று கொடுத்தாய்

பச்சை வயல்களை பரிசளித்தாய்

பொங்கும் இன்பம்

எங்கும் தந்தாய்

கண்களும் நன்றியால் பொங்குதே

தாயே உன் பெயர்

சொல்லும் போதே

இதயத்தில் மின் அலை பாயுமே

இனி வரும் காலம்

இளைஞனின் காலம்

உன் கடல் மெல்லிசை பாடுமே

தாய் அவள் போல்

ஒரு ஜீவனில்லை

அவள் காலடி போல் சொர்கம் வேறு இல்லை

தாய் மண்ணை போல்

ஒரு பூமி இல்லை

பாரதம் எங்களின் சுவாசமே

சன கண மன

 சன கண மன அதிநாயக செய கே

பாரத பாக்கிய விதாதா.

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா

திராவிட உத்கல வங்கா.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்

மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.

வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

விந்திய இமாச்சல யமுனா கங்கா

உச்சல சலதி தரங்கா.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்

எதிரொலிக்கிறது;

யமுனை, கங்கை ஆறுகளின்

இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்

வணங்கப்படுகிறது.

தவ சுப நாமே சாகே,

தவ சுப ஆசிச மாகே,

காகே தவ செய காதா.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.

சன கண மங்கள தாயக செயகே

பாரத பாக்கிய விதாதா.

செய கே, செய கே, செய கே,

செய செய செய, செய கே.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!

கண்ணன் வருகின்ற நேரம்

 கண்ணன் வருகின்ற நேரம்

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்

தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்

கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென

தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம்

கூட மீளும்!

(கண்ணன்)

சல்ல சலனமிட்டு ஓடும்,

நதி பாடும் - தென்றல்

தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல

துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென

துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்

சொல்லிச் சொல்லி இசைபாடும்!

(கண்ணன்)

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று

கண்டதும் வண்டொன்றும் வர்லை

இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு

காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்

கண்ணன் அன்றி வேறு இல்லேன்!

(கண்ணன்)

தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன

செளக்கியமோ என்று கேட்கும் - அட

மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்

முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே

மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!

(கண்ணன்)