Monday, January 2, 2017

ஆளுமா டோலுமா

Aaluma Doluma Aisalagadi Maaluma
Therichu Galeejunu Graaki Vitta Saaluma
Arikalu Karikalu Kothu Vitta Kalakkalu
Palichunu Palapalakuthu Mittai Mela Localu

Dammukuna Dubukkuna Dolaka Dhaan Gumukkuna
Gumukkuna Dumangoli Eppadi Pona Enakenna
Karikuna Murikina Thotaiyathaan Erakuna
Irukina Sarakina Ondiyaantha Unukina

Aaluma Doluma
Aaluma Doluma Aisalagadi Maaluma
Therichu Galeejunu Graaki Vitta Saaluma
Arikalu Karikalu Kothu Vitta Kalakkalu
Palichunu Palapalakuthu Mittai Mela Localu

Wrong Ah Raava Dhaan Rowdy Aanan Joevaathaan
Thudda Kuduthuputa Kuthu Vizhum Showathaan
Robbery Forgery Mokka Scene Bore da


ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

அறிக்கல்லு கரிக்கல்லு 
கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது 
மிட்டா மேல Local-u 

டமுக்குனா டுபுக்குனா 
டோலக்கதாம் குமுக்குனா 
டுபுக்குனா டுமாங்கோலி 
எப்டி போனா எனகென்னா 

கருக்குனா முறுக்குனா 
தவுட்டையதான் எறக்குனா 
இருக்குனா சரக்குனா 
ஒண்டியாந்தா உனகின்னா 

ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா 
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

Sunday, January 1, 2017

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

யுகபாரதி வரிகளில் நந்தினி ஷ்ரிகர் குரலில் இமானின் இதம்
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை ,
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ (கண்ணம்மா...)
செம்பருத்தி பூவப்போல சினேகமான வாய்மொழி
செல்லம் கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால் நிலா உன் கையிலே சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே
கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா
உன்னை உள்ளம் எண்ணுதம்மா (கண்ணம்மா...)
உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தானென வாயார போற்றுவான்
கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா
வெட்கம் நெட்டி தள்ளுதம்மா (கண்ணம்மா...)
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ

https://www.youtube.com/watch?v=8eIRNHLEfCA

ஏ சொழலி


பாடலாசிரியர் விவேக்
இசை சந்தோஷ் நாராயணன்

ஏ சொழலி அழகி வெலகி கலகட்டிப் போறவளே
இருடி திருடி
அழகூட்டித்தான் நகரும் அரளி (விஷச் செடி)
நொர தள்ளிப் போனேன் வெட்கம் கொறடி
ஒன் வயசத்தான் தித்திப்பா தின்னேன்.
உசுரத்தான் கத்தி சொன்னேன்

 பொட்டக் கோழி அலகுல
என்னக் கொத்தி அலயுற
விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி
(முட்டை ஓடு மாதிரி இருக்கும் என்னுடைய மனசில் கண்ணை எறியறதால சில்லு சில்லா செதறுறேன் மஞ்சள் நிற பூவே. எறலி - கொன்றை மலர்)
ஏ சொழலி அழகி கலகி கலகட்டிப் போறவளே
இருடி திருடி

(கலகி - கலகமூட்டுபவள். ஆனா, லிரிக் வீடியோல கலரினு தப்பா வந்திடுச்சு. இதில் வரும் இருடி திருடிக்கு பதிலா நெழலி (நிழல் தருபவள்னு அர்த்தம் படும்படியா எழுதினேன்)   வெரலி - (விரலி மஞ்சள்) எழுதியிருந்தேன். ஆனா, வர்த்தைகள் ரொம்ப குழப்பமா இருக்குமேனு தான் மாத்திட்டோம்)
கெடமாட்டுக்கு உணவா அழலி
வித போட்டக் காட்ட திங்கக்குடுடி
(பெரிய மாட்டுக்கு சாப்பாடா வெள்ளை கடுகு எப்படிப் பத்தும்? விதை போட்ட காடு மொத்தத்தையும் குடுனு அர்த்தம்)
நீ மனசோடா கல்வெட்டா நின்ன
கண்வெட்டா வெட்டி கொன்ன
பொட்டக் கோழி அலகுல
என்னக் கொத்தி அலயுற
விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி

 ஏ சொழலி...
ஆலங்காட்டுக் கர
ஆத்தில் நீந்தும் பெற
ஒடயிற அல்லி ஒலறுது நித்தம்
காதல வண்டு காதுல கத்தும்
பொழங்குற வண்டு முழுங்குது முத்தம்
பூவுல தத்தித் தாவுற சத்தம்
பொழியிது தேனு  பொதையிற நானு
அடமழ கொட்டுச்சா
கனவுல மாட்டிக் கொழம்புன மீனு
முழிச்சதும் தப்புச்சா?

பொட்டக் கோழி அலகுல
என்னக் கொத்தி அலயுற
விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி
ஏ சொழலி...

”இந்தப் பாட்டு முழுசும் பூவில் தேனெடுக்கும் வண்டு பாடற மாதிரி ஆரம்பிச்சு மீனுடைய கனவா முடியும். அதாவது மீன் அதனுடைய கனவில் தன்னை ஒரு வண்டா நினைச்சுக்கும். பூவுடைய காதில் தினமும் காதலை சொல்லும் வண்டு, பூ கிட்டயிருந்து முத்தத்தை உணவா சாப்பிட்டுட்டுப் போகுது. பூவிலிருந்து தேன் மழை மாதிரி பொழியிது. இதுல புதைஞ்சா என்ன பண்றதுனு தெரியலையேனு நினைக்கறப்போ மீன் தன்னுடைய கனவிலிருந்து முழிச்சுக்கும். நான் தான் மீனாச்சே! நீந்தித் தப்பிச்சிடுவேனேனு நினைக்கும் போது கோழியுடைய அலகில் இருக்கும். எப்படி இருந்தாலும் தன் காதலிகிட்டயிருந்து தப்பிக்க முடியாலையே காதலன் சொல்ற மாதிரி முடியும் பாட்டு.” என்கிறார் விவேக்.

இப்போ முதல்ல இருந்து வரிகள படிங்க. இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்.

https://www.youtube.com/watch?v=Cz3WauQ5BBI