Friday, November 22, 2013

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

படம்: சொல்ல துடிக்குது மனசு
உணர்வு: பாசம்


பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாற கூடும்
நான் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

பூவே செம்பூவே

உனைப்போல நானும்  ஒரு பிள்ளை தானே

மலர் வந்து கொஞ்சும் கிளிபிள்ளை தானே

உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை

விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை

நான் செய்த பாவம் என்னோடு போகும்

நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்

இந்நாளும் எந்நாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

பூவே செம்பூவே

No comments:

Post a Comment