Friday, November 22, 2013

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

படம்: சொல்ல துடிக்குது மனசு
உணர்வு: பாசம்


பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாற கூடும்
நான் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

பூவே செம்பூவே

உனைப்போல நானும்  ஒரு பிள்ளை தானே

மலர் வந்து கொஞ்சும் கிளிபிள்ளை தானே

உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை

விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை

நான் செய்த பாவம் என்னோடு போகும்

நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்

இந்நாளும் எந்நாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

பூவே செம்பூவே

Friday, October 11, 2013

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்ததோ

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்ததோ

காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது

இன்று பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி நீல

எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்

இந்த நெருக்கம் தான் கொல்லுதே

எந்தன் நாளானது இன்று வேறானது

வண்ணம் நூறானது வானிலே

யார் இந்த …

தீர தீர ஆசை யாவும் பேசலாம்

மெல்ல தூரம் விலகி போகும்வரையில் தள்ளி நிற்கலாம்

என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்

இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்

என்னாகிறேன் என்று ஏதாகிறேன்

எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்

எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது

அது பறந்தோடுது வானிலே

யார் எந்தன் …

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே

அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே

வைரம் போல பெண்ணின் மனது உலகிலே

அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும்

என்றும் மண்ணிலே

கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி

என் பாதையில் இன்று உன்காலடி

நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்

நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி

யார் இந்த …

யார் எந்தன் …

நகராமல் இந்த நொடி நீல

எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்

இந்த நெருக்கம் தான் கொல்லுதே

எந்தன் நாளானது இன்று வேறானது

வண்ணம் நூறானது வானிலே