Saturday, November 30, 2019

Hello Miss இம்சையே

Hello Miss இம்சையே ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆணே

அங்கிட்டுக் கொஞ்சம் இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும் பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா
அம்மான் மகளே அம்மான் மகளே
அன்பாய் அழகாய் வீசும் புயலே
அம்மான் மகளே அம்மான் மகளே
என்னை அசத்தும் ஆழ்வார் குழலே

அன்புக்கு நீங்கள்தான் அஸ்திவாரம்
வம்புக்கும் நீங்கள்தான் அடிவாரம்
நட்பென்று சுற்றுவீர் முதல்வாரம்
சட்டென்று பார்வைகள் இடம் மாறும்
அழகான அலர்ஜி நீங்கள்
ஆனாலும் Energy நீங்கள்
Time என்ன கேட்டால் வழியுற மனமே
ஒருமுறை பார்த்தால் அலையுற தினமே
(Hello Miss)

கண்களால் முதலில் புன்னகைப்போம்
பின்புதான் கண்களில் மழை வடிப்போம்
உங்களை நம்பித்தான் கையை பிடிப்போம்
அய்யய்யோ தப்பென்று கண்கள் துடைப்போம்
உதட்டோடு உதட்டுச்சாயம்
ஆண்நெஞ்சில் ஆறாக்காயம்
கொஞ்சலும் ஏனோ கெஞ்சலும் ஏனோ
நீயோ நானோ மிஞ்சலும் நோ நோ
(Hello Miss)

Sunday, April 28, 2019

நான் போகிறேன் மேலே மேலே

நான் போகிறேன் மேலே மேலே 
பூலோகமே காலின் கீழே 
விண்மீன்களின் கூட்டம் என் மேலே 
பூ வாளியின் நீரை போலே 
நீ சிந்தினாய் எந்தன் மேலே 
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான்

என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

ஆ ....
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

Tuesday, February 5, 2019

மறுவார்த்தை பேசாதே


தாமரையின் வரிகளில்

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரல்
  உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்

விழி நீரும் வீண் ஆக
இமை தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண் ஆனதே.....

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே......

விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வைத் துளிகள்...
பிரியாத போர்வை நொடிகள்...
மணி காட்டும் கடிகாரம் தரும் வாதை அறிந்தோம்
உடை மாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்... மடிந்தாலும் வரும்...
முதல் நீ.... முடிவும் நீ....
அலர் நீ.... அகிலம் நீ....

தொலைதூரம் சென்றாலும்
தொடுவானம் என்றாலும் நீ
விழியோரம் தானே மறந்தாய்...
உயிரோடு முன்பே கலந்தாய்...

இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி... சினம் தீரும் அடி...
இழந்தோம்... எழில்கோலம்....
இனிமேல்... மழைக்காலம்....