Thursday, October 25, 2018

விழிகளில் ஒரு வானவில்


விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்கிறேன்.. நான் பார்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னகுமோ இங்கே..
முதன் முதலாய் மழங்குகிரேன்..
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன் என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா..
விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மேயானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவூ..
என் தேதி பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..
விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
நான் உனக்காக பேசினேன்..
யார் என்னக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்
பென்னாகிரேன் இங்கே..
தயகன்களால் திணறுகிறேன்..
நிலென்று சொன்னபோதிலும்
நிலாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி...

Tuesday, October 23, 2018

மாலையில் யாரோ மனதோடு பேச

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ… ஓ…
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ… ஓ…
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
கரை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல
கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ… ஓ…
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ… ஓ…
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

Thursday, February 22, 2018

காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை


காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்

பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு ஓ....
பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்

பால் போல் சிரிப்பது பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
பால் போல் சிரிப்பது பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்

பொன்னை விரும்பும் பூமியிலே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம்: ஆலயமணி

அழகு மலராட அபினயங்கள் கூட

தகிடு தகிடு தோம்....
தகிடு தகிடு தோம்....
தகிடு தகிடு தோம்.... ச...... ச.....


ம க ம ச... ம க ம ச... ம க ம ச...
ச... ச...


அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்


அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்


த க திம் த... த க திம் த...
த க திம் த... த க திம் த...
தகிடு தோம்.... தகிடு தோம்.... த திம் த... த திம் த... த க...
தகிடு தோம்.... தகிடு தோம்.... த திம் த... த திம் த... த க...


ஆ.... ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவெது கிடையாது என்ற
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமோ வாழ்வினிமை பெறுமோ
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி


அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்


ஆ... ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்று மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றிப் பாயாத நிலம் போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றதே
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
வேறேன்ன நான் செய்த பாவம்


அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்


ச ச ச நி நி க க க ம ப க க க ச ச நி
நி நி நி ச ச க க க ம ப க க க ச ச நி


ச க க நி ச.... ச க க நி ச...
ச க க நி ச.... ச க க நி ச...
நி ச நி த நி ச நி ச நி த ப
தகிடு தகிடு தோம்.... தகிடு தோம்....
கிகிடு தகிடு தோம்.... தகிடு தோம்....
தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்....
தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்....
தகிடு தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்....
த க தகிட த க தகிட த க தகிட தகிடு தகிடு தோம்....
த க தகிட த க தகிட த க தகிட தகிடு தகிடு தோம்....
த க தகிட த க தகிட த க தகிட தகிடு தகிடு தோம்....
த க தகிட த........

சங்கீத ஜாதி முல்லை

ஆ... ஆ....
ஆ... ஆ.... ஆஆஆ.... ஆஆஆ.... ஆ....
ஆஆஆ.... ஆ....
ஆ... ஆ.... ஆ....ஆ....ஆ....
ஆஆஆ.....  ஆஆஆஆஆ.....  ஆ....
தம் நம்த நம்த நம் தம்.... நம்த நம் தம்...
நம்த நம் தம்...
நம்த நம் தம்...
நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்...
நம்தம்த நம் தம்...
நம்தம்த நம் தம்...
நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்...
என் நாதமே வா... ஆ....

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இன்றி  பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா.... ஆ....
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை

திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ

திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி...
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ...

ராஜ தீபமே....
எந்தன் வாசலில் வாராயோ
குயிலே... குயிலே... குயிலே குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே... நீதானே...
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே... நீதானே... நீதானே...
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்

நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
ராஜ தீபமே...

சச... சச... நிச... ரிச... நிச... நிச... நிச... பநி... சநி... ரிச... நித... பத... நிசரி...
ரிக... ரிக... சகரிக... நிசரி... நிசரி... சநிதப... தசரி... சநி...தப... மப... தப...
ச... நிச நி... நிச நி... தி சநிதப... பமத... நிச சநி... தப... மப...
சரிக... சரிக... ரிசரி கமப... கமப... கமப... மதப... மதபதநி...
நிச  நிச... சநி சநி... பத நிச கமப... சநி சநி... சரி சநி... சநி சரி...

தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்

மகண யகன ரகன சகன... யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன... சகன தகன பகன ககன

மகண யகன ரகன சகன யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)

Thursday, January 11, 2018

அழகே அழகே அழகின் அழகே நீயடி

MovieOru Kal Oru KannadiMusicHarris Jayaraj
Year2012LyricsNa. Muthukumar
SingersMadhumitha, Mukesh

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!!
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா?

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்..
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்..
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்
இருந்தும் நடித்தாய்..!!
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
என்னக்காய் திறப்பாய்..!!
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!

உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..
உன்னக்கும் என்னக்கும் நடுவில் காதல் வலம் வர..

கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!

பலப் பல கனவுகள் இருக்கு..
அதை ஏன் சொல்லணும் உனக்கு..?
மனசுவிட்டு பேசு நீயும்.. நண்பனா என்னக்கு..
பார்த்ததும் பிடித்தது உனக்கு..
பழகிட தோனணும் என்னக்கு..
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..?

நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..

நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா?
ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைகிறாய்..
உன்னக்கும் என்னக்கும் எதற்கு காதல் வலம் வர..

கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!