Monday, December 19, 2011

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு



தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்
(தேவதை போல்..)

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்
(தேவதை போல்..)

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்
(தேவதை போல்..)

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி, மலேசிய வாசுதேவன். மனோ, SN சுரேந்தர்

பூங்கதவே தாள்திறவாய் (நிழல்கள்)


http://www.youtube.com/watch?v=P2AJG3LU7sg&feature=related

பூங்கதவே தாள்திறவாய் (நிழல்கள்)
பாடல்: பூங்கதவே தாள்திறவாய்
குரல்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து

பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

(பூங்கதவே)

நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாரம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்

(பூங்கதவே)

திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்

(பூங்கதவே)